விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஏப்.19ம் தேதி விடுமுறை...அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பீட்டுப் பணிக்கு வரும் 19ம் தேதி விடுமுறை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் ந. லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கை அடிப்படையில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது, நாளை ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி மற்றும் 20.04.2025 ஈஸ்டர் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள்
என்பதால், முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 19.04.2025 அன்று ஈஸ்டர் ஈவை முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்குமாறு அனைத்து மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!