இவ்ளோ கேவலமாவா இருப்பாங்க?! நடிகர் தாடி பாலாஜியின் மனைவி கைது! சிசிடிவி ஆதாரம் சிக்கியது!

 
தாடி பாலாஜி மனைவி நித்யா

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, பக்கத்து வீட்டில் வசிப்பவரின் காரை கற்கலால் தாக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இவ்ளோ கேவலமாவா இருப்பாங்க? என்று இணையதளத்தில் கொந்தளித்து,நித்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தனை நாட்களாக சினிமா புகழ் தாடி பாலாஜியின் கண்களை மறைத்தது என்று நினைத்திருந்தோம்.. பாவம் இவ கிட்ட மாட்டிக்கிட்டு அவரு தான் கஷ்டப்பட்டிருக்காரு.. என்று சமூக வலைத்தளங்களில் தாடி பாலாஜிக்கு திடீர் ஆதரவும் பெருகியுள்ளது. மழை ஓய்ந்தாலும் தூவானம் விடாது என்பார்கள். அது போல பிக்பாஸ் சமயத்தில் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவிக்குமான பிரச்சனை  பூதாகரமாக வெடித்தது. குழந்தையை யார் பொறுப்பில் விடுவது என்பது துவங்கி, குடிச்சிட்டு தாடி பாலாஜி கொடுமைப்படுத்துகிறார்.. வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கு என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தாடி பாலாஜியின் மனைவி நித்யா முன்வைத்தார்.

தாடி பாலாஜி மனைவி நித்யா

தற்போது நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினர். விவாகரத்துக்கான மனு நிலுவையில் இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டிலும் இவர்களது களேபரம் தொடர்ந்தது. 

தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தாடி பாலாஜியின் முன்னாள் மனைவி நித்யா, முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வருகிறார். அவருக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த நித்யா எதிர்வீட்டில் வசிப்பவரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். 

தாடி பாலாஜி மனைவி நித்யா

நித்யா, எதிர் வீட்டில் வசிப்பவரின் காரை கற்களால் சேதப்படுத்துவது அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது நித்யா கல்லால் காரை தாக்கியதை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web