+2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்... 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை விவரம்!

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட இந்த இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் ரிசல்ட்களை தெரிந்துகொள்ளமுடியும். மாணவர்களின் கைபேசி நம்பருக்கும் அதாவது பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி மூலம் ரிசல்ட் அனுப்பப்படும்.
இந்நிலையில் ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன் பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.82 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக 97.98 சதவீதத்துடன் ஈரோடு 2 ம் இடத்திலும், திருப்பூர் 97.53 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், கோயம்புத்தூர் 97.48 சதவீதத்துடன் 4ம் இடத்திலும், கன்னியாகுமரி 97.1% 5ம் இடத்திலும் இருக்கிறது. இதே போன்று முக்கியமானங்களில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்களும் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!