மும்பையைக் கலங்கடித்த அர்ஷ்தீப்... அடுத்தடுத்து ஸ்டம்புகளை உடைத்ததால் 24 லட்சம் நஷ்டமாம்!

 
அர்ஷ்தீப் சிங்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அனல் தெறித்தது. மும்பையின் வெற்றிக் கனவை கலைத்து, அடுத்தடுத்து ஸ்டம்புகளை உடைத்தெறிந்த அர்ஷ்தீப்பின் பந்து வீச்சு மும்பை அணி வீரர்களை க் கனவிலும்  துரத்தி இருக்கும். அந்த உடைந்த ஸ்டம்புக்களால் 24 லட்சம் ரூபாய் நஷ்டமாம். நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து கேமரூன் க்ரின் களமிறங்கினார். ரோஹித் சர்மா, கேமரூன் இணை சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது.

முந்தைய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார். இவர்கள் அதிரடியை பார்த்து மும்பை அணி வெற்றிபெறும் என கணிக்கப்பட்டது.

அர்ஷ்தீப் சிங்

தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மும்பை அணியை கலங்கடித்து வெற்றிக் கனவை கலைத்து விட்டார்.

இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்தப் பந்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டு துண்டாகியது.

அர்ஷ்தீப் சிங்

அடுத்ததாக களமிறங்கிய நேகல் வதீரா, முதல் பந்திலேயே திலக் வர்மா போலவே ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தப் பந்தும் மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்தது. இதனை பஞ்சாப் ரசிகர்கள் கொண்டாடினர். 

அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சால் பி.சி.சி.ஐக்கு 24 லட்சம் நஷ்டமாகியுள்ளது. நவீன தொழில்நுட்பம் நிறைந்த எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை சுமார் 24 லட்ச ரூபாய் என்று விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்றைய போட்டியில் ஸ்டம்ப்பை அர்ஷ்தீப் சிங் பதம் பார்த்ததால் நஷ்டம் தான்..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web