ஜூன் 16 ம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு!

 
கல்லூரி

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்படும் தேதி குறித்து  முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் .  2025-2026  கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என உயர்க்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி
இது குறித்து  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்  முன்னதாக தெரிவித்தார். இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web