தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது... ஸ்டாலின் திட்டவட்டம்.!

தமிழ்நாட்டில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்குள் எந்த ரூபத்திலும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது. மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை” என பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி நாங்கள் பேசவில்லை என வானதி சீனிவாசன் ‘காஷ்மீர் சம்பவத்தில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என கூறியிருக்கோம். இதன் பிறகு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு, ”ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றுவிட்டனர், எல்லா இடத்திலும் நல்லவர்கள் இருக்க முடியாது என துரைமுருகன் கூறினார். அதனை தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இந்நிலையில், வானதிக்கு, கீதா ஜீவன் பதில் அளித்துள்ளதை பார்த்து சபாஷ் சரியான போட்டி என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!