உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்... பணிக்கு கிளம்பிய போது பெரும் சோகம்!

 
காந்தி


தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கேவி குப்பம், பசுமாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் 59 வயது காந்தி.  இவர் காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து  வருகிறார். காந்தியின் மனைவி இந்துமதி.

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி

இந்த தம்பதிகளுக்கு மகனும், மகளும் உள்ளனர்.  திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து  வந்த காந்தி 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண்ரூட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். உதவி ஆய்வாளராக  பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக பொறுப்பில் இருந்தவர், காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார்.  நேற்று காலை சுமார் 08:30 மணிக்கு  அவர் வழக்கம்போல பணிக்கு புறப்பட்டார்.

ஆம்புலன்ஸ்
அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பது போல தோன்றி இருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறவே, அவர்கள் உடனடியாக பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள், காவலரின் மரணத்தை உறுதி செய்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web