47 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கித் தவிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்திய ஆயுத படையின் ஒரு பகுதியாக உள்ள பி.ஆர்.ஓ. அமைப்பினர் சாலை கட்டுமான பணியை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 57 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். அவர்கள், மனா பகுதியருகே உள்ள ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீதமுள்ள 47 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி முதல்வர் புஷ்கர் சிங் தமி , இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . 3 முதல் 4 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பிப்ரவரி 28ம் தேதி இன்று பனிச்சரிவு ஏற்படும் என லஹால் மற்றும் ஸ்பிடி போலீசார் சார்பில் நேற்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான வழியை பயன்படுத்தும்படியும், கூடிய வரை பயணங்களை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி இருந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!