ஏடிஎம் கார்டுகளில் பணம் எடுப்பதற்கான வரம்பு குறைப்பு!
Mar 6, 2026, 19:07 IST
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்புகளை குறைத்துள்ளது. இந்த வரம்புகள் இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு உள்ளன.

முதலாவது வகை கார்டுகளுக்கான தினசரி வரம்பு முன்பு ரூ.1 லட்சம் இருந்தது. தற்போது இது ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகை பிரீமியம் கார்டுகளுக்கான வரம்பு ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.75,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அமல்படுத்தப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் தினசரி பண பரிமாற்றத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
