வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கரையை கடந்து, தற்போது வலுவிழந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகத் தெற்கு கடலோரத் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23°C ஆக இருக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
