நாளைக்குள் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் உறுதி !

 
 நாளைக்குள் இந்தியா, பாகிஸ்தான் மீது  தாக்குதல் உறுதி !
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட  பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர்   மோடி தலைமையில் இன்று ஏப்ரல் 30 இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில்  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் தீவிரஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக உரிய பதில் அளிப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும்  பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி அளித்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இன்னும் 24 – 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வருவதாக நம்பகமான உளவுத்துறை தகவல் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web