இந்தியா வந்திறங்கினார் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்... இன்று ஜெய்சங்கருடன் சந்திப்பு!

 
ஜெய்சங்கர்

நேற்று இரவு ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங் அரசு முறை பயணமாக இந்தியா வந்திறங்கினார். டெல்லியில் தங்கியிருக்கும் பென்னி வோங், இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். இந்த பயணம், இரு நாட்களுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு சூழல், சர்வதேச அரசியல் போன்ற பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளது.

இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட பென்னி வோங் இன்று இரவு மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புகிறார். குறுகிய கால பயணமாக இருந்தாலும், இருநாடுகளுக்கும் இடையேயான புத்தாக்கல் உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான தொடர்பாக இந்த பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!