ஆர்ப்பரிப்புடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 4 சுற்றுகள் முடிவில் 41 பேர் காயம்

 
ஜல்லிக்கட்டு


மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில் தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

இன்றைய போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியதும் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். 

ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும் போதும் இருசக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு

தற்போது வரை 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 8 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கு அடுத்தப்படியாக திவாகர் என்பவர் 7 காளைகளை அடக்கி 2ம் இடத்திலும், ராகவா என்பவர் 3 காளைகளை அடக்கி 3ம் இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 41 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!