கோடை விடுமுறையில் பெற்றோர்கள் அனுமதியின்றி ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள்... அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

 
விடுமுறை அன்பில் மகேஷ்

தமிழகத்தில் மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அன்பில் மகேஷ்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுங்கள். சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள். பெற்றோர்களுடன் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். 

அன்பில் மகேஷ்

அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். திறமைகளுக்கு ஏற்ப பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?