திருச்சியில் விழிப்புணர்வு பேரணி... வடமாநிலத்தவர்களின் விவரங்கள் சேகரிப்பு.. காவல் ஆணையர் சத்யபிரியா பேட்டி!

 
திருச்சி சத்யபிரியா

திருச்சி மாநகரத்தில் சாலையோரம், மேம்பாலத்தின் கீழ் தங்கி உள்ள வட மாநிலத்தவர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா பேட்டியளித்தார்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, மார்க்கெட், தில்லை நகர், கோட்டை பாலம் வழியாக மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. 

திருச்சி சத்யபிரியா

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் சத்ய பிரியா, திருச்சி மாநகரத்தில் வாகன விபத்தை குறைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கூடுதல் எண்ணிக்கையிலான போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி கேமராக்கள் மூலம்  அபராதம் விதிக்கப்படுவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.  இனி வரும் நாட்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை  என்றார்.

திருச்சி சத்யபிரியா

திருச்சி மாநகரத்தில் சாலையோரம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதே போல் போக்குவரத்து சிக்னல்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பதும், சாலை சிக்னல்களில் நிற்கும் கார் கண்ணாடிகளைச் சோப்பு நீர் கொண்டு அனுமதியின்றி சுத்தம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முன்னதாக, தலைக்கவசம்  அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மர கன்றுகளை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web