திறப்பு விழாவுக்கு தயாராகும் அயோத்தி... பறக்கும் ட்ரோன்கள்... வெறிக்கும் கேமராக்கள்... உச்சக்கட்ட பாதுகாப்பு!

 
அயோத்தி ட்ரோன்கள்

அயோத்தி நகர் முழுவதுமே பல வருடங்கள் கழித்து விழாக்கோலம் பூண்டுள்ளது. கிட்டத்தட்ட ராமர் பட்டாபிஷேக விழாவைப் போல அயோத்தி நகர் காணப்படுகிறது. இம்மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு அயோத்தி  முழுவதுமே உச்ச பாதுகாப்பு நடவடிககைகளில் உத்திரபிரதேச மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் உச்ச பாதுகாப்புக்கு உரிய அரசியல் முக்கியஸ்தர்கள், பலதுறை பிரபலங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தி ராமர் கோயிலில் குவிய இருக்கின்றனர்.

அயோத்தி கோயில் - பிரதமர் மோடி

இவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே பல வகையிலும் பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டவர்கள். எனவே கோயில் வளாகத்திலும் பல்லடுக்கு பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவிஐபி பாதுகாப்புக்கு பொறுப்பான ஏஜென்சிகள் தனியாக மெனக்கிட்டாலும், ஒட்டுமொத்த பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை உபி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வானிலிருந்து கண்காணிக்கும் ஆளில்லா சிறு விமானங்களான ட்ரோன்கள், கேமராக்களுடன் வளையவர இருக்கின்றன. ஆகாயத்தை விட தரையில் அதிகப்படி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இவை தவிர்த்து காவல்துறைக்கு உதவும் வகையிலான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்தும் அயோத்தி மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் கண்காணிப்புக்கான ட்ரோன்கள் தவிர்த்து, ஊடுருவல் ட்ரோன்களை தடுத்து அழிப்பதற்கான ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டமும் அங்கே நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உதவியுடன், அங்கீகரிக்கப்படாத எந்த ஆளில்லா விமானத்தையும் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

பாதுகாப்பு பணியில் உபி போலீஸார்

கண்காணிப்புக்கு அப்பால் அயோத்தி கோயிலை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், உரிய பாதுகாப்புகளுடன் தயார் நிலையில் உள்ளன. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அயோத்தி கோயில் விழாவின் பொருட்டு, அங்கே உலகின் அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் நிறுவப்பட்டுள்ளன.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web