பகீர்!! பள்ளி மாணவன் கல்லால் அடித்து கொலை!! சக மாணவர்கள் அட்டூழியம்!!

 
மௌலீஸ்வரன்

படிக்கட்டில் தொங்கிய படியே பயணம், வகுப்பறைகளில் அட்டூழியம், பள்ளிகளில் மேஜை நாற்காலிகளை உடைத்தல், வகுப்பறைக்குள் தாலி கட்டுதல் என பல  வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவர்களிடையே நல்லொழுக்க வகுப்புக்கள்  நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் பள்ளிகளில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  10 ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் பலரும் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் ஒருவர் மீது ஒருவராய் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாகத் தெரிகிறது. 

மௌலீஸ்வரன்

 

இதில் சக மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாகத் தவறாக எண்ணி மாணவன் மெளலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவனை மௌலீஸ்வரன் மயங்கியதால் ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மௌலீஸ்வரனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மெளலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெளலீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 

மௌலீஸ்வரன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், மௌலீஸ்வரனை தாக்கிய மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் தாக்கியதில் சக மாணவர் உயிரிழந்நதது அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web