நாத்தனாரை திருமணம் செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய்!

 
சுக்லா

திருமணம் முடிந்ததும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் மாமியார் , மருமகள் சண்டை, மருமகள், நாத்தனார் சண்டை ஆரம்பித்து விடும். அதிசயமாக சில வீடுகளில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் ராசியாகி விடுவார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் கணவரை விட்டு விட்டு, நாத்தனாருடன் இணைந்து வாழ்க்கை நடத்த முடிவு செய்த விசித்திர சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரமோத் தாஸ்.இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள். இருவரும் மனம் ஒருமித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

5வது திருமணம்

திடீரென ஒரு நாள் மனைவியையும், அவரது தங்கையையும் காணவில்லை.  அதிர்ச்சியடைந்த தாஸ் பல இடங்களில் இருவரையும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சோகத்துடன் வீடு திரும்பிய தாசுக்கு புதிய எண்ணிலிருந்து அவரது மொபைலுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய அவரது மனைவி  வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும் , இனி  தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

தாசுக்கு மிகவும் அதிர்ச்சி. தம்பதியர் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இல்லை. ஏன் தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்? என பலவாறாக யோசித்தார். எதுவும் பிடிபடவில்லை.  சுக்லா தேவி திருமணமாகி தாஸ் வீட்டுக்கு வந்த நாள் முதல் தாஸின் தங்கை சோனி மீது சுக்லாவுக்கு ஈர்ப்பு உண்டு. இருவரும் இணை பிரியா தோழிகளாக இருந்து வந்தனர். 

இருவரும் இணைந்து நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி சுக்லா தனது நாத்தனாரை காதலிக்க தொடங்கினார். இருவரும் காதல் மழையில் நனைய தொடங்கி உள்ளனர். நட்பிலிருந்து காதலாக மாறியதும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.  தாங்கள் யோசித்தது போலவே திருமணமும் செய்து கொண்டு தனியாக வசிக்கவும் தொடங்கியுள்ளனர். இது குறித்து விளையாட்டாக கணவரிடம் தெரிவிக்க அவர் சிரித்துக் கொண்டே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது  மாமியார், இதனால் ஊரில் பலரும் தன்னை அவதூறாக பேசுவதாக கூறி தனது மகள் சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டார்.  இது குறித்து தற்போது சுக்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ்

இந்த விநோத சம்பவம்  குறித்து ரோசரா போலீஸ் நிலைய ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத்  செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில்  "இந்த புகார் தொடக்கத்தில் வினோதமாக இருந்தது. இப்புகார் குறித்து விசாரிக்க பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க இருக்கிறோம்.  சுக்லாவின் காதல் விசித்திரமானது. அவர் தன்னை சோனுவின் கணவராக நினைத்து நடை, உடை பாவனைகளை ஆணாக மாற்றியுள்ளார். அதன்படி தலைமுடியை வெட்டியதுடன் தனது சுக்லாதேவி என்ற பெயரை சூரஜ் குமார் என மாற்றிக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய விசாரணை தொடங்கப்படும்" என கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web