பகீர்!! நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்த கொடூரம்!! காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்!!
கடந்த 2021முதல் தாரிக்ஜோத் சிங், ஜாஸ்மீன் கவுர் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். காதலன் தாரிக்ஜோத்தை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்படி அடிக்கடி ஜாஸ்மீனை தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேசவில்லை. ஆத்திரமடைந்த தாரிக்ஜோத், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார்.
An “uncommon level of cruelty” - that is how prosecutors have described the murder of Jasmeen Kaur…who - it was today revealed - was buried alive by her ex-boyfriend and stalker Tarikjot Singh.
— Beth (@ExcellBeth) July 5, 2023
He was caught on CCTV hours before buying cable ties and a shovel. @9NewsAdel pic.twitter.com/l1BD9T4qMh
அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்த அவரை தனது நண்பரின் காரில் கடத்தி சென்றார். சுமார் 650 கி.மீ. தூரத்திற்கு அழைத்து சென்று அவரை பிளிண்டர்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று அங்கு கழுத்தை அறுத்து கண்களை கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்து விட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் ரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கொலையின் நடந்த கொடுர சம்பவங்கள்குறித்து இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது. தாரிக்ஜோத் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!