பகீர்... பெண் கொடூர கொலை... மிளகாய்ப் பொடி தூவிச் சென்ற மர்ம நபர்கள்!
கோவையில் வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை கொடூரமாக அறுத்து படுகொலைச் செய்து விட்டு, மிளகாய்ப் பொடி தூவி விட்டு சென்ற மர்ம கும்பலைப் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கரையம்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (61). இவரது மனைவி தங்கமணி (54). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தினருடன் தனித் தனியே வசித்து வருகின்றனர்.
இதனால் சுப்பிரமணியும், தங்கமணியும் தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், சுப்பிரமணி நேற்று காலை வெளியே சொந்த வேலை காரணமாக சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவுகள் திறந்திருந்தது. மனைவியைத் தேடி குரல் கொடுத்தப்படியே வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் சமையலறையில், தங்கமணி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி சுப்பிரமணி கதறி துடித்தார். சுப்பிரமணியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தங்கமணியின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் கொண்டு வந்திருந்த மோப்பநாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று திரும்பியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தங்கமணி கொலைச் செய்யப்பட்ட வீட்டில் இருந்து பணம், நகை எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் இந்த கொலை எதற்காக நடைபெற்றது? கொலைச் செய்தவர்கள் யார்? நகை, பணம் கொள்ளை அடிக்கப் படாதது போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!