பகீர் வீடியோ... திருவிழாவில் 152 தேர் சரிந்து விபத்து... தமிழர் உட்பட 2 பேர் பலி, 11 பேர் படுகாயம்!
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவில் மத்தூரம்மா அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டத்தில் 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். அம்மன் தேரை தொடர்ந்து தொட்ட நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன. இவை இரண்டும் சிறிய தேர்கள் இதில் அம்மன் வீற்றிருக்கும் 152 அடி உயர தேர் கட்டஹள்ளி கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது லேசாக அங்கு மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தேரை மெதுவாக இழுத்து வந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென தேர், அப்படியே சாய்ந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி தெறித்து ஓடினர். தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். தேர் விழுந்ததில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன. இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டனர். இதில் லோகித்(வயது 24) என்ற ஆட்டோ டிரைவர் தேரின் அடியில் சிக்கி பலியானார். பலியான லோகித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
பெங்களூருவின் கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி (14) என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2024 திருவிழாவிலும் இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தில் தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
