பகீர் வீடியோ... ஆற்றில் சென்ற படகில் பயங்கர தீவிபத்து... 143 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டை பொறுத்தவரை போக்குவரத்திற்கு மக்கள் அதிக அளவில் ஆறுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயணங்களின்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு ருகி ஆற்றில் படகு சென்றுகொண்டிருந்தது. மரத்தால் ஆன அந்த படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேலும், எரிபொருளும் அந்த படகில் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் படகு பண்டமா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எரிபொருள் வைத்திருந்த பகுதியிலும் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் குதித்த பலர் மாயமாகினர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்று பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போதிய தகவல் தொடர்பு வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!