25 அடி உயர பால்கனி இடிந்து விழுந்து கோர விபத்து... திருமண நிகழ்வில் பெரும் சோகம்!

 
பால்கனி

இத்தாலியின் டஸ்கனி பகுதியில் உள்ள 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜியாச்செரினோ மடாலயத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென பேரதிர்ச்சியாக மாறியது. விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த வேளையில், முதல் தளத்தின் தரைப்பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் மணமக்கள் உட்பட பலர் சுமார் 25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

26 வயதான பாலோ முக்னைனி மற்றும் வலேரியா யபர்ரா ஆகிய மணமக்கள், திருமண மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பழமையான கட்டிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!