நாளை சுற்றுலா பயணிகளுக்கு தடை!! அதிரடி உத்தரவு!!

 
கன்னியாகுமரி திரௌபதி முர்மு

நாளை மார்ச் 18ம் தேதி சனிக்கிழமை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்தில் கன்னியாகுமரி வருகை தர உள்ளார். தற்போது  கேரளாவின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் பிறகு நாளை தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்கிறார்.  

கன்னியாகுமரி

தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார்.

திரௌபதி முர்மு

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம் அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web