உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு... எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை!

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேர்த்திக்கடனுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கரூர் மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் இந்நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனிடையே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தனிநீதிபதி அனுமதியளித்து இருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், எச்சில் இலை மீது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதியளித்து தனிநீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எச்சில் இலையில் உருளுவது, சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அனுமதி வழங்க கூடாது என கூறியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!