ட்ரோன்களுக்கு தடை.. பலத்த பாதுகாப்பு.. இன்று கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

 
திரௌபதி முர்மு

இன்று கன்னியாகுமரி வருகிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. கடந்த மாதம் கோவை மற்றும் மதுரை வந்திருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று மார்ச் 18ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக  திரெளபதி முர்மு கன்னியாகுமரி வருகிறார். 

திரவுபதி முர்மு

இன்று காலை 12.30 மணிக்கு கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப் படகு மூலமாக சுற்றி பார்க்கிறார்.  அதன் பின்னர், கன்னியாகுமரி சுற்றுலா மண்டபத்திற்குச் செல்ல இருக்கிறார். பின்னர் இன்று மாலை 3 மணிக்கு விவேகானந்தா கேந்திரா சென்று ராமாயண தரிசன சித்திர கூடத்தை பார்வையிடுகிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு தற்போது கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் பார்வையிடப்படவுள்ள பகுதிகளை அதிகாரிகள் நேரடியாக களஆய்வு செய்து வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜனாதிபதியின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web