பகீர் வீடியோ!! வீட்டின் மேற்கூரையில் மோதிய விமானம்!! பதைபதைக்கும் காட்சிகள்!!
ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் . இருந்த போதிலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மை காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Live Plane Crash#accident #planecrash #Aircraftcrash #dhanbad pic.twitter.com/4NjrSU27uZ
— Chiranjivi Singh🇮🇳 (@chiranjivi470) March 23, 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுலா விமானம் ஒரு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், உள்ளூர் சுற்றுலாவுக்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குடியிருப்பு கட்டிடத்தில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் 14 வயது பயணி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் . இருந்த போதிலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மை காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. வீட்டின் கான்கிரீட் தூணில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகிறது. விமானி மற்றும் பயணி அமர்ந்திருக்கும் பகுதி தூணுக்கு இடையில் மோதி சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த வீட்டின் உரிமையாளரான நிலேஷ் குமார் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , தனது குடும்பத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகளும் மயிரிழையில் உயிர்தப்பினர் எனவும் தெரிவித்துள்ளார்.
#Jharkhand: A glider, which took off from #Dhanbad airport, crashed after felling at a house near Birsa Munda Park, leaving the pilot and a child on board seriously injured.@NewIndianXpress @TheMornStandard @santwana99 @Shahid_Faridi_ pic.twitter.com/2RanpQH8dO
— Mukesh Ranjan (@Mukesh_TNIE) March 23, 2023
பாட்னாவில் வசித்து வரும் விமானப்பயணி தனது உறவினர் வீட்டிற்கு வந்து, விமானத்தில் இருந்து நகரத்தைப் பார்க்க கிளைடர் விமான சவாரி செய்யலாம் என ஆசைப்பட்டார். இந்த சேவை தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிளைடர் சேவையில் விமானி மற்றும் ஒரு பயணி என இருவர் மட்டுமே சுற்றிப் பார்க்கலாம்.
தன்பாத் நகர மக்கள் பொழுதுபோக்கிற்காக காற்றில் இருந்து நகரம் முழுவதையும் பார்த்து மகிழும் வண்ணம் இந்த கிளைடர் சேவை தொடங்கப்பட்டது. இந்த விபத்தை அடுத்து தன்பாத் நகரின் தற்போது வான்வழிப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க