போட்றா வெடிய... ஏ + பிரிவில் ரோஹித், கோஹ்லி , பும்ரா, ஜடேஜா... BCCI வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியல் வெளியீடு!
பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) இந்திய அணிக்கான (சீனியர் ஆண்கள்) வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை இன்று ஏப்ரல் 21ம் தேதி திங்கள்கிழமை அறிவித்தது. பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மிக உயர்ந்த ஏ பிளஸ் பிரிவில் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
— BCCI (@BCCI) April 21, 2025
BCCI announces annual player retainership 2024-25 - Team India (Senior Men)#TeamIndia
Details 🔽https://t.co/lMjl2Ici3P pic.twitter.com/CsJHaLSeho
ஏ பிரிவில் கே.எல். ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி உட்பட 6 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பி பிரிவு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

19 கிரிக்கெட் வீரர்களுக்கு சி-பிரிவு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீரர்களின் பட்டியல் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், வம் துபே ரவி,பிஷ்னோய் வாஷிங்டன் ஞாயிறு முகேஷ் குமார் சஞ்சு சாம்சன் அர்ஷ்தீப் சிங் பிரசித் கிருஷ்ணா ரஜத் படிதார் துருவ் ஜூரெல் சர்ஃபராஸ் கான் நிதிஷ் குமார் ரெட்டி இஷான் கிஷான் அபிஷேக் சர்மா ஆகாஷ் தீப் வருண் சக்கரவர்த்தி ஹர்ஷித் ராணா .
நான்கு பிரிவுகளிலும் உள்ள வீரர்களின் ஊதியத்தை பிசிசிஐ குறிப்பிடவில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு பொதுவாக போட்டிக் கட்டணத்திற்கு மேல் ஆண்டுக்கு ஏ பிளஸ் பிரிவில் ரூ.7 கோடி, ஏ பிரிவில் ரூ.5 கோடி, பி பிரிவில் ரூ.3 கோடி மற்றும் சி பிரிவில் ரூ.1 கோடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
