#BREAKING: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜினாமா!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு கமிட்டி தலைவர் சேத்தன் ஷர்மா . இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்ட ரகசிய ஆபரேஷனில் முன்னுக்கு பின் முரணாக பேசியது பெரும் சர்ச்சையானது. அந்த ஆபரேஷனில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோஹ்லியுடன் பேசிய அனைத்து சங்கதிகளையும் வெளியிட்டார்.
அத்துடன் உடல்தகுதி குறைபாடு உள்ள கிரிக்கெட் வீரர்கள் சீக்கிரம் களமாட வருவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். அதன்படி சில நாட்களுக்கு முன் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவி வந்தன. அதே போல் ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதிலும் கங்குலிக்கு துளியும் விருப்பம் கிடையாது.
கோஹ்லியிடமும் மாறுபட்ட கருத்தினை கொண்டிருந்தார். இதே போல் பல தகவல்களை வெளியிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவராக தனது பதவியில் இருந்து விலகுவதாக சேத்தன் சர்மா அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க