உஷார்!! தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

 
மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்புக்கள் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் போடப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புக்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. பிப்ரவரி மாதத்தில் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்திருப்பது மக்களை பீதியடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்புக்கள் கிடையாது. இதனால் பொதுமக்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல்,  சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் இந்த காய்ச்சல், கொரோனா வைரஸ் தொற்றைப் போலவே வேகமாக பரவி வருகிறது. காற்றின்  மூலமாகவும் பரவும் இந்த வகையான காய்ச்சலின் அறிகுறிகளாக வறட்டு இருமல், தொடர் காய்ச்சல், உடல் அசதி, கை,கால் வலி போன்றவைகளை மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால காய்ச்சலையும், இருமலையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க. தென்காசி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரையில் இருக்கும் என்றும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கடைகளில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மார்ச் 10ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குளிரும், மழையும் குறைந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக  புதுவகையான வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மெகா தடுப்பூசி முகாம்

காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்  தமிழகம் முழுவதும் இன்று மார்ச் 10ம் தேதி வெள்ளிக்கிழமை 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்! பயன்படுத்திக்கோங்க மக்களே….!

இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள்  இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி  முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம். இந்த முகாமில் காய்ச்சல், இருமல் இருப்பவர்களை  பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அத்துடன்  மீண்டும் நோய்த்தொறு  பரவல் தொடங்கியிருப்பதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web