மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் பீட்ரூட் ஜூஸ்...!!
மழைக்காலம் என்றாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அஜீரணம் பெரும் சவாலாக அமையும். இதற்காக பல கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அனைத்தையும் ஈடுகட்டும் வகையில் குளிர்காலம் நிறைவடையும் வரை தினமும் பீட்ரூட் சாறு அருந்தினாலே போதும் .உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும். பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் உடல் வெப்பநிலை சீராகும். வெயிலோ , மழையோ தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். அதுவும் வெதுவெதுப்பான நீர் அருந்தும்போது, அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைச் சீராக்கும்.இந்த காலகட்டத்தில் குளிர்ந்த நீர் மற்றும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இஞ்சி, மிளகு கலந்த சூப் அருந்தலாம். தயிர், இறைச்சி, ஃபாஸ்ட் புஃட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் பெருங்காயம், இஞ்சி சேர்த்த மோர் குடிக்கலாம். அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.அவசியமான பணிகள் தவிர வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் காலம் இலேசாக தலையை காட்டும் போதே உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே இருக்க்கும் பிரச்சனைகள் இன்னும் தீவிரமாகிவிடும். பீட்ரூட் சாறு குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வாரம் ஒரு முறை பீட்ரூட் சாறை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய், இரத்தசோகை,அல்சர் போன்றவை வராமல் தடுக்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!