பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குச்சீட்டில் நடத்த முடிவு!
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 369 வார்டுகளில் நடைபெறும் இந்த தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக பாரம்பரிய வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு முறையால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், வாக்காளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை கிடைக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
