உஷார்... இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்க உள்ளது.

மழை

இன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காரைக்கால் பகுதியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!