நகைக்கடன் வாங்குபவர்கள் உஷார்... நகைகளை ஏலம் விட ஆர்.பி.ஐ. அனுமதி!

 
நகைக்கடன் தங்கம் நகைக்கடன் தங்கம்

வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து, நகைக்கடன் வாங்குபவர்கள் இந்த மாற்றத்தைத் தெரிஞ்சுக்கோங்க. நகைகளை ஏலம் விட அனுமதித்து ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

தங்களது அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு இந்த உத்தரவின் மூலமாக ஒரு அபாய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கான வட்டியை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால், அந்த நகைகளை ஏலத்திற்கு விட்டுப் பணத்தை மீட்க வங்கிகளுக்கு முழு அதிகாரம் வழங்கி ஆர்பிஐ உத்தரவிட்டுடுள்ளது.

இதுவரை, நகை ஏலத்திற்கு வருவதற்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி அத்தகைய நீண்ட கால அவகாசத்தை எதிர்பார்க்க முடியாது என்பது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்பிஐ

புதிய நடைமுறையின்படி, கடன் காலக்கெடு முடிந்தவுடன், ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நோட்டீஸ் காலம் முடிந்த உடனேயே வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தாராளமாகத் தொடங்கலாம். அதாவது, உங்கள் நகையைத் திரும்பப் பெறுவதில் நீங்கள் காட்டும் ஒவ்வொரு நிமிடத் தாமதமும், அந்த நகை உங்கள் கையை விட்டு நிரந்தரமாக நழுவிச் செல்லக் காரணமாகிவிடும்.

"தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், வட்டி கட்டாத நகைகளை ஏலத்தில் விற்று லாபம் பார்க்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன" என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், அடகு வைத்த நகையை மீட்க நினைப்பவர்கள் வட்டியைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் கட்டுவது அவசியமாகிறது.

RBI ஆர்பிஐ

கடன் வாங்கியவர்கள் தங்களது மொபைல் எண்கள் மற்றும் முகவரிகளை வங்கியில் சரியாகப் பதிவு செய்திருப்பது அவசியம். ஏனெனில், அனுப்பப்படும் ஒரே ஒரு இறுதி நோட்டீஸ் உங்களை வந்து சேரவில்லை என்றாலும், வங்கி சட்டப்படி ஏலத்தைத் தொடர முடியும். ஏலத்திற்குப் பிறகு நகையின் மதிப்பு கடன் தொகையை விட அதிகமாக இருந்தால், மீதித் தொகை வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், உங்களது சென்டிமென்ட் நகைகளை இழப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, நகைக்கடன் வாங்கியுள்ள பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, ஏலப் பட்டியலில் தங்களது நகைகள் இடம் பெறாமல் தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!