உஷார்... 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

 
மழை

வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தென் தமிழ்நாட்டில் பல இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மழை

அதன்படி, தற்போது வெளியான புதிய அறிவிப்பில், பின்வரும் 10 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை.

பனி, மழை

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!