பெரும் பரபரப்பு.. முன்னாள் அமைச்சரின் மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்!
முன்னாள் அமைச்சரின் மகளுக்கே ஆசிட் வீச்சு என மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் ஜெய்பான் சிங் பாவையா. இவரது மகள் சமீதா சிங், குவாலியர் மாவட்டத்தில் உள்ள மாதவ் மகாவித்யாலயா கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் மகள் சமீதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்து உள்ளது. 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி என குறிப்பிட்ட அந்த கடிதத்தில், அமைச்சர் 2 மாதங்களில் கொலை செய்யப்படுவார். அமைச்சர் மகள் மீது ஆசிட் வீசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீதா பணிபுரியும் மையத்தில் வேலை செய்யும் மற்றொரு பணியாளருக்கு எதிரான போக்கை சமீதா கைவிடும்படி குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி இல்லையெனில், கடிதத்தில் எழுதியுள்ளது போல் நடக்கும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுபற்றி அதே நாளில் சமீதா போலீசில் புகார் செய்துள்ளார். இதனை உடனடியாக போலீசார் விசாரணைக்கு எடுத்து கொண்டனர். எனினும், 3 மாத விசாரணைக்கு பின்னர்தான், தற்போது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அமைச்சரின் மகளுக்கே ஆசிட் வீச்சு என மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்