பெரும் அதிர்ச்சி.. சிக்கன் குழம்புக்காக மகனை கொலைசெய்த தந்தை !

 
சிவராம்

கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள குட்டிகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம் (32). இவர் தனது மனைவி, இரு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சிவராமின் வீட்டில் சிக்கன் உணவு சமைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி, வீட்டில் உள்ள அனைவருக்கும் ருசியாக சிக்கன் சமைத்து வைத்திருந்தார்.

சிவராம்

ஆனால், இந்த உணவை சிவராமின் தந்தை ஷீனா விரும்பி முழுவதுமாக சாப்பிட்டுள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய சிவராம் சாப்பிட நினைத்த போது, வீட்டில் சிக்கன் இல்லை என்றதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரமடைந்த சிவராம், தனது தந்தை ஷீனாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மகன் சிவராம் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிவராம்

சிக்கன் தொடர்பாக தந்தையுடன் மகன் சிவராம் கடுமையான வாக்குவாதம் செய்த நிலையில், இது பெரும் சண்டையாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனது மகன் சிவராமை தந்தை ஷீனா மரக்கட்டையால் அடித்து தாக்கத் தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் சிவராம் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சிவராம் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து தந்தை ஷீனாவை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web