பெரும் அதிர்ச்சி.. மாநகர் ஆயுதப்படை காவலர் தற்கொலை!!

 
ஹரிகிருஷ்ணன்

ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் எஸ்.அழகாபுரியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(30). காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தனது சிறு வயது கனவை சிறைவேற்றினார். ஹரிகிருஷ்ணன் கடந்த 2017ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார்.

திருப்பூர் மாநகர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்ததார். இவருக்கு திருமணமாகி மனைவி கிருஷ்ணபிரியாவுடன் வசித்துவந்தார். திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளாக குழந்தை இல்லை. தம்பதியர் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து திருப்பூர் சாமுண்டிபுரம் சிவசக்திநகரில் வசித்து வந்தனர்.

ஹரிகிருஷ்ணன்

இந்த நிலையில் மாநகர் ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. தேனியில் போதை பழக்கத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்துள்ளார். இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வந்தவர், வழக்கம் போல் மாநகரில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பணியாற்றுவதாக கூறிவிட்டு சென்றார்.

ஹரிகிருஷ்ணன்

பின்னர் மனைவியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட ஹரிகிருஷ்ணன், தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதனை அவரது மனைவி காவல்துறைக்கு தெரிவித்தபோது, போலீசார் தீவிரமாக தேடியுள்ளனர். எனினும் அதற்குள் அவர் விஷம் அருந்தி உயிரிழந்தார். இது தொடர்பாக மனைவி அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஹரிகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்


 

 

From around the web