வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல்!! பீதியில் மாணவர்கள்!!

 
துப்பாக்கி

பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்களை கொள்ளப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குள் இயல்பாக நுழைந்த நபர் ஒருவர், திடீரென அங்குள்ள 8 ஆம் வகுப்பறைக்குள் புகுந்தார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியரையும் மிரட்டியுள்ளார்.

துப்பாக்கி

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கு விரைந்து வந்த காவலர்கள் துப்பாக்கியுடன் வந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். 

போலீசார் மேற்கண்ட துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி

மேலும் அவர் பள்ளிக்குள் எதற்காக துப்பாக்கியுடன் புகுந்தார், அதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web