பெரும் சோகம்.. லாரி மீது மோதிய சொகுசு பேருந்து... 7 பேர் பரிதாபமாக பலி!

 
கோரக்பூர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து அம்பேத்கர் நகர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

லக்னோ - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோரக்பூர்

மேலும், பயணிகள் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, அவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் அனைவரின் உடல்நிலையும் சீரான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கோரக்பூர்

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தும், லாரியும் மோதியதில் ஏழு பயணிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web