பிக் பாஸ் டைட்டில் வின்னர் கைது....!
தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. சண்டை, சச்சரவு பொழுதுபோக்கு, பரபரப்பு, விறுவிறுப்பு, அடாவடி என எதற்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி தான் பிக்பாஸ். முதலில் இந்தி தொலைக்காட்சிகளில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 2017 முதல் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தெலுங்கிலும் 7வது சீசன் சமீபத்தில் தான் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதன் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாந்த். பிக்பாஸ் 7 பைனலில் அமர்தீப்புக்கும், பல்லவி பிரசாந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றார். பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையான ஒன்று தான்.
ஆனால் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் சமாதானம் ஆகி நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் தெலுங்கு பிக்பாசை பொறுத்தவரை பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக பல்லவி பிரசாந்த் அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் 2ம் இடம் பிடித்த அமர்தீப்பின் காரை சாலையில் மறித்து தாக்கி உள்ளனர். அது மட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப் பட்டுள்ளது. ரசிகர்களின் அடாவடியால் தற்போது பல்லவி பிரசாந்த் தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். போலீசார், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக இப்படி ரசிகர்கள் அடாவடித்தனம் செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!