பிரியாணி ஃப்ரீ!! முரட்டு சிங்கிள்களே வருக வருக!! அதிரடி அறிவிப்பு!!

 
பிரியாணி

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறி  காதலை வெளிப்படுத்திக் கொள்வர். மேற்கத்திய கலாச்சாரமாக இருந்த இந்த பழக்கம் தற்போது இந்தியாவிலும் சக்கை போடு போடத் தொடங்கி விட்டது.  இதற்காக பல அதிரடி அறிவிப்புகளை காதலர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. 

அதிரடியாக காதலர்கள் யாரும்கிடைக்காமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு  பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. தற்போது அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

Valentines Day

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் காதலர் தினமான இன்று சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்த உணவகம் விளம்பரம் செய்துள்ளது.

இந்த விளம்பரத்தில், காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம் என்று உணவகம் ஆறுதல் கூறியுள்ளது. சில்சாரில் உள்ள உணவகம் அனைத்து ஒற்றையர்களுக்கும் அவர்களின் ‘வயிற்றை விரும்புவதாக’ உணர பிரியாணியை இலவசமாக வழங்கும்.

Assam

இந்த முயற்சிக்கான நோக்கம் குறித்து உரிமையாளர் சிரஞ்சீவ் கோஸ்வாமி கூறுகையில், “ஆமாம், வரும் சிங்கிள்களுக்கு பிரியாணி இலவசம். சிங்கிள்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்கணும்” என்றார். மேலும், ஒருவர் தனிமையில் இருக்கிறாரா என்பதை அவர் எப்படிக் கண்டுபிடிப்பார் என்ற கேள்விக்கு, ஒருவர் ஜோடியா அல்லது தனிமையா என்பதை கண்டுபிடிக்க முடியாது, ஆனால் யாராவது உரிமையாளரை அணுகினால், அவர் அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச உணவு வழங்குவார் என்று கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web