பாஜக பிரமுகருக்கு 163 நாட்கள் சிறைத் தண்டணை!! பரபரப்பு தீர்ப்பு!!

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன். இவர் மோதலை தூண்டும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருவதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் . 2021ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கல்யாணராமனை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பியதால் கல்யாணராமன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இருவேறு மதத்தவரிடையே மோதலை தூண்டும் வகையில் 18 பதிவுகள் வெளியிட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சைபர் க்ரைம் வழக்கில் கல்யாணராமனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தை கல்யாணராமன் ஏற்கனவே,சிறையில் அனுபவித்து விட்டதால் தற்போது விடுவிக்கப்படுவதாகவும் எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க