பஹல்ஹாம் கேள்விக்கு பத்திரிகையாளர் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ!

இந்தியாவில் காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
BJP workers thrashed a journalist from Kathua associated with Jagran news.
— Shantanu (@shaandelhite) April 23, 2025
He was asking, “who is responsible for the Pahalgam attack? Is the home ministry not accountable?
For this, BJP goons attacked him and now he is in hospital.
Shame on BJP workers! pic.twitter.com/m30PAW7oVh
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் ராஜீவ் ஜஸ்ரோதியா, தேவேந்திர் மான்யால் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாய் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் ஷர்மா உட்பட்டோர் பேட்டி எடுப்பதற்காக வந்தனர்.
அந்த பேட்டியின் போது இந்த தாக்குதலை தடுக்கத் தவறிய உளவுத்துறையும் மத்திய அரசும் தோல்வி அடைந்து விட்டதா என ராகேஷ் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார். கோபம் அடைந்த பாஜக தொண்டர்கள் பத்திரிக்கையாளரை தாக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராகேஷ் சர்மா மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!