பார்வையற்ற மாணவி சந்தேக மரணம்… பாலியல் துன்புறுத்தல்?
திருச்சியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாய் கமலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிசிஜடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
