கேரளாவில் பரபரப்பு... முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் மற்றும் அவரது வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரதமர் மோடி மே 2ம் தேதி கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டு இருக்கும் இந்த மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!