பத்திரம் மக்களே.. இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

பத்திரம் மக்களே... கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களை மழை நேரத்தில் தனியே வெளியே அனுப்பாதீங்க. இன்று தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஜூன் 13ம் தேதி தமிழகத்தில், நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜூன் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!