கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 
கிணற்றுக்குள்  தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வயல்வெளியில் கிடந்த நெல்லிக்காய்களை எடுக்க சென்ற சிறுவன், கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் வெல்கம் சிட்டி தெருவை சேர்ந்தவர் சண்முகம். பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும் கதிர்செல்வம் (4) என்ற ஒரு மகனும் உண்டு. இந்தநிலையில் நேற்று கதிர்செல்வமும், உறவினர்களது குழந்தைகளான மணிமாரி, ஜோதி கருப்பசாமி ஆகியோரும் வீடு அருகே உள்ள சாஸ்தா கோவில் பகுதிக்கு விளையாட சென்றனர். 

அங்கு, வயல்வெளியில் உள்ள நெல்லிக்காய் மரத்திற்கு கீழே ஆங்காங்கே நெல்லிக்காய்கள் சிதறி கிடந்துள்ளன. அவற்றை எடுப்பதற்காக 3 சிறுவர்களும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நெல்லிக்காய் மரத்திற்கு அருகில் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் கதிர்செல்வம் தவறி விழந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 சிறுவர்களும் அலறியவாறு ஓடியுள்ளனர். 

கிணறு

அப்போது பக்கத்து நிலத்திற்குள் அறுவடை எந்திரத்தை ஓட்டி சென்ற டிரைவர் சிறுவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். கதிர்செல்வம் கிணற்றுக்குள் தவறி விழுந்த விபரத்தை கூறியுள்ளனர். உடனடியாக அவரும் ஓடிச்சென்று கிணற்றில் விழுந்த கதிர் செல்வத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். அதற்குள் சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பிணமாக மிதந்துள்ளான். 

கிணறு

இது குறித்து தகவலின் பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ கிணற்றுக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web