சொத்து தகராறு... அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி... செங்கல்பட்டில் பரபரப்பு!

 
சந்திரன்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், சந்திரன் (28). இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் ஒரே தொகுப்பு வீட்டில் வசிக்கின்றனர்.

இவர்களுக்குள் சொத்து காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த தொகுப்பு வீட்டை  தனக்கு தரும்படி தம்பி சந்திரன், அண்ணன் வெங்கடேசனிடம் பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. அண்ணன் வெங்கடேசன், இந்த வீட்டை நான் வைத்துக் கொள்கிறேன்.

சந்திரன்

இந்த வீட்டிற்கு பின்னால் உள்ள காலி இடத்தை நீ எடுத்துக் கொள், மேலும்  ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 2 சவரன் நகை தருகிறேன் என்று கூறியதாகவும் அதற்கு தம்பி ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சந்திரன், தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து அண்ணன் வெங்கடேசனை சுட்டுவிட்டு தப்பினார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், சந்திரனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்து தரும்படி கேட்டனர்.

சந்திரன்

ஆனால் சந்திரன் இதற்கு ஒத்துழைக்காததால் அங்கிருந்த வீடுகளிலும் அதை ஒட்டியுள்ள புதர் பகுதியிலும் தேடினர். இதில் ஒரு சில வீடுகளில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கள்ள துப்பாக்கிகள் கிடைத்தன.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் மேலும் இரு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் தம்பியே அண்ணனை கொலைசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web