கள்ளக்காதலை கண்டித்த தம்பி.. 20 துண்டுகளாக வெட்டிக் கொன்ற அக்கா 8 ஆண்டுக்கு பின் கைது !

 
பாக்கியஸ்ரீ

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ (31). இவரும் அதே பகுதியை சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலமாக மாறியது.

கல்லூரி முதல் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பாக்கியஸ்ரீ -  சங்கரப்பா தளவார் இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, சாதியை காரணம் காட்டி பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். 

இதனையடுத்து சங்கரப்பா தளவார் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். எனினும் 6 மாதத்தில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனிடையே சங்கரப்பா வேலைக்கு சென்ற தொழிற்சாலையின் அருகேதான், முன்னாள் காதலி பாக்கியஸ்ரீ வசித்துவந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது.

பாக்கியஸ்ரீ

தகவலறிந்து கடந்த 2015ஆம் ஆண்டு பாக்கியஸ்ரீயின் சகோதரன் லிங்கராஜ் (22) தனது அக்காளை கண்டித்துள்ளார். தங்களது உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய பாக்கியஸ்ரீ , சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்தார். அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சனஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர். 

பின்னர் பாக்கியஸ்ரீ யும், சங்கரப்பாவும் கர்நாடகாவில் இருந்து தப்பித்து, மகராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தனர். மறுபுறம் இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பாக்கியஸ்ரீ  

இந்நிலையில், அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று பாக்கியஸ்ரீ (39), மற்றும் சங்கரப்பா(40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால், தம்பியை அவரது அக்காவே அடித்துக் கொன்று, 8 ஆண்டுகளுக்கு பின் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web